For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் குளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் உடல் மீட்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் குளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 15 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தின் பேலூரில் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து விஷ்ணுசமுத்திர குளத்தில் கவிழ்ந்தது.

பேருந்தில் பயணம் செய்தவர்களில் அனைவரும் குளத்தில் மூழ்கினர். இயந்திரம் மூலம் மூழ்கியவர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பேருந்தில் பயணம் செய்தவர்களில் 15 பேர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல் மீட்கப்பட்டுள்ளது.

கிரேன் உதவியுடன் பேருந்தை மீட்கும் பணியும் எஞ்சிய பயணிகளை மீட்கும் பணியும் நடைபெற்றுவருகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

English summary
A bus fell in a pond in Karnataka and 15 were dead.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X