அவதூறு வழக்கு: வீரபாண்டி ராஜா தலைமறைவு… கைது செய்ய போலீஸ் தீவிரம்…

Subscribe to Oneindia Tamil

சேலம்: நகராட்சி தலைவியை அவதூறாக, ஆபாசமாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஆனால் போலீசார் கையில் சிக்காமல் அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி பகுதியில் சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்பதை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான வீரபாண்டி ராஜா, மற்றும் ஆத்தூர் நகர தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் நகராட்சி தலைவி உமாராணியை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்த உமாராணி ஆத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வீரபாண்டி ராஜா மற்றும் நகர செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகிய 2 பேர் மீதும் அவதூறு வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நேற்று இரவு 2 மணியளவில் பூலாவரியில் உள்ள வீரபாண்டி ராஜா வீட்டிற்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் அவரை கைது செய்ய சென்றனர். அப்போது அவர் வீட்டில் இல்லாததால் போலீசார் திரும்பிவிட்டனர்.

இதற்கிடையே அவதூறு வழக்கில் கைதாகாமல் இருக்க வீரபாண்டி ராஜா முன்ஜாமீன் பெற முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+