உத்தரகாண்ட் வெள்ளத்தில் 5400 பேர் மாயம்: அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு
டேராடூன்: உத்தரகண்டில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கிய 5400 பேர் காணவில்லை என்று அம்மாநில பேரிடர் மீட்பு குழு ஆணையர் அஜய் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு காரணமாக இந்தக் கோரத்தை சந்தித்தது உத்தரகாண்ட் என்பது நினைவிருக்கலாம்.

ஆயிரக்கணக்கில் பலி
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். மேலும் ஆயிரக்கணக்கானோர் மாயமானார்கள்.

சீரழிந்து போன கேதர்நாத்
கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட புனித இடங்களுக்கு யாத்திரை மேற்கொண்ட வெளி மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். காடு, மலைகளில் சிக்கித் தவித்தவர்களை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.

5400 பேர் மாயம்
இந்த நிலையில், மாயமான 5400 பேரை தேடும் பணி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வந்தது. இதுவரை அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆண்கள் அதிகம் - பெண்கள் 914
அனைவருமே மாயமாகி விட்டதாக உத்தரகாண்ட் மாநில பேரிடர் மீட்பு குழு ஆணையர் அஜய் தெரிவித்துள்ளார். இதில், 4035 பேர் ஆண்கள் என்றும், 914 பேர் பெண்கள் என்றும், 451 பேர் குழ்நதை என்றும் அவர் கூறியுள்ளார்.

மீண்டும் நிலச்சரிவு
உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கனமழை பெய்ததில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சமவுளி மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் மண்ணில் புதைந்தன. இருப்பினும் மக்களுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் விரிசல்
தியோசரி கிராமத்தில் 14 வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. பாவுரி மாவட்டம் கடாலி கிராமத்தில் பள்ளிக்குச் செல்லும் சாலை சேதமடைந்துள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications