72 ஆண்டுக்கு முன் மூழ்கிய இங்கிலாந்து கப்பல்: ரூ 250 கோடி இந்திய வெள்ளிக்கட்டிகள் மீட்பு
லண்டன்: சுமார் 72 ஆண்டுகளுக்கு முன்னர் புயலில் சிக்கி கடலில் மூழ்கிய இங்கிலாந்து கப்பல் ஒன்றிலிருந்து, தற்போது 61 டன் வெள்ளி மீட்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ250 கோடி ஆகும்.
ஏராளமான மதிப்புமிகுந்த பொருட்களோடு இந்தியாவில் இருந்து 1941ம் ஆண்டு புறப்பட்ட இங்கிலாந்து சரக்குக் கப்பல் ஒன்று அட்லாண்டிக் கடலில் எதிர்பாராத விதமாக மூழ்கியது.
அக்கப்பலின் பெயர் எஸ்.எஸ்.கய்ர்சோப்பா. அக்கப்பல் முழுவதும் இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி, இரும்பு தாது மற்றும் தேயிலை சரக்கு நிரம்பியிருந்தது.
ஜலசமாதி....
அட்லாண்டிக் கடலில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கப்பலின் எரிபொருள் தீர்ந்தது. கடற்புயலும் அதோடு கைகோர்த்துக் கொள்ள 20 நிமிடங்களில் கப்பல் இருந்த சுவடே தெரியாமல் ஜலசமாதி அடைந்தது.
மூழ்கிய கப்பல்....
சுமார் 400 அடி நீளம் கொண்ட இந்த கப்பல் அட்லாண்டிக் கடல் பகுதியில் அயர்லாந்து அருகே மூழ்கியது.
தேடுதல் வேட்டை...
கப்பலில் இருக்கும் பொருட்களை மீட்டெடுக்கும் ஒப்பந்தம் ஒடிசா மெரைன் என்ற நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டதையடுத்து அந்நிறுவனம் தனது தேடுதல் வேட்டையைத் தொடங்கியது.
வெள்ளிக்கட்டிகள்.....
தீவிர தேடுதலின் பயனாக தற்போது, அக்கப்பலில் இருந்து ஒவ்வொன்றும் சுமார் 1100 அவன்ஸ் எடையுள்ள 2,792வெள்ளிக்கட்டிகள் மீட்கப்பட்டுள்ளது.
அம்மாடியோவ்...
அதன் மொத்தஎடை சுமார் 61 டன் ஆகும். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட ரூ250 கோடி எனத் தெரிகிறது.
கொள்ளை லாபம்...
ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, கப்பலில் மீட்கப்படும் பொருட்களில் 80% மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ஓடிசி நிறுவனத்திற்கும்,மீதம் உள்ள 20% இங்கிலாந்து அரச கருவூலத்திற்கும் சொந்தம்.
அல்வா தானா...
அப்போ இந்தியாவிற்கு.... ‘அல்வா' தானா?