அதிமுக எம்.பிக்கள், டி.ராஜா எம்பிக்களாக பதவியேற்பு: கனிமொழி ஆகஸ்ட் 5ல்!
டெல்லி: தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவிற்கு எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்ட 5 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.ராஜா, அ.தி.மு.க.வை சேர்ந்த மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், டி.ரத்தினவேல், ஆர்.லட்சுமணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக்கு கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அ.தி.மு.க.வை சேர்ந்த மைத்ரேயன் உள்பட 5 பேர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மாநிலங்களவை தலைவர் ஹமீத் அன்சாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மாநிலங்களவைத் துணைத் தலைவர் குரியன் உள்ளிட்ட பலரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

தமிழில் பதவியேற்பு
அதிமுக எம்.பிக்கள் மைத்ரேயன், அர்ஜுனன், ரத்தினவேலு, லட்சுமணன் ஆகியோர் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆங்கிலத்தில் பதவியேற்றுக் கொண்டார். தி.மு.க.வை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகஸ்ட் 5ஆம் தேதி பதவியேற்றுக் கொள்கிறார்.












Click it and Unblock the Notifications