அதிநவீன வானிலை ஆய்வு சேட்டிலைட் இன்சாட்-3டி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
Subscribe to Oneindia Tamil

இந்தியாவின் அதிநவீன வானிலை ஆய்வு செயற்கைக்கோளான இன்சாட்-3டி பிரெஞ்சு கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை 1.23 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி கூட்டமைப்பான ஏரியான்ஸ்பேஸின் ஏரியான் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
விண்ணில் ஏவப்பட்ட 37வது நிமிடத்தில் இன்சாட்- 3டி செயற்கைக்கோள் புவிநிலை மற்றும் சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளின் எடை 2,060 கிலோ ஆகும்.
நிலம் மற்றும் கடற்பரப்புகளை கண்காணிக்கவும், வானிலை குறித்த தகவல்களை துல்லியமாக அளிக்கவும் ஏதுவாக இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் இமேஜிங் சிஸ்டம் முன்னதாக ஏவப்பட்ட வானிலை ஆய்வு செயற்கைக்கோளான கல்பனா மற்றும் இன்சாட்-3ஏ செயற்கைக்கோளை விட சிறந்ததாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications