''வீரபாண்டியார் மகனை நிர்வாணமாக ஓட ஓட விரட்டுகிறேனா இல்லையா பார்...''
சேலம்: மறைந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாவை, நான் நிர்வாணமாக ஓட ஓட விரட்டுவேன் என்றுஅதிமுக பிரமுகர் ஒருவர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில், நகர அதிமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
அப்போது கூட்டத்தில் ஆத்தூர் நகராட்சித் துணைத் தலைவரும், நகர அதிமுக செயலாளருமான மோகன் ஆவேசமாக பேசினார்.
அவர் பேசுகையில், முன்னாள் தி.மு க எம்.எல்.ஏ., வீரபாண்டி ராஜா, ஆத்தூர் நகராட்சி சேர்மன் உமாராணியிடம், இக்கூட்டத்தில் வந்து தண்ணீர் தரமுடியாது என்றால் நிர்வாணமாக தான் செல்ல முடியும் என அசிங்கமாகப் பேசியுள்ளார்.
இந்த வீரபாண்டி ராஜாவை, இரண்டு ஆண்டுக்குள் ஆத்தூர் நகரில் நிர்வாணமாக ஓட வைப்பேன். வீரபாண்டி ராஜாவுடன் யார் வந்தாலும் சரி அவர்களையும் நிர்வாணமாக ஓட வைப்போம்.
கடந்த திமுக ஆட்சியில் ஆத்தூர் நகருக்குத் தேவையான குடிநீர் திட்டப் பணி மேற்கொள்ளாததால்தான் தற்போது குடிநீர் பிரச்னை அதிகரித்து உள்ளது. இதையெல்லாம் மறைத்துவிட்டு திமுக வினர் மலிவு விளம்பரத்துக்காக மக்களை ஏமாற்றுவதற்கு போராட்டம் நடத்தினர் என்றார்.












Click it and Unblock the Notifications