இந்துத் தலைவர்கள் கொலை.. திசை திருப்ப போலீஸ் முயற்சி - பாஜக புகார்
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாஜக, இந்து முன்னணி தலைவர்கள் குறித்து தமிழக காவல்துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கை மூலம் உண்மைகளை மூடி மறைக்க முயல்வதாக தெரிகிறது.
தனிப்பட்ட பகையில் கொலை நடந்ததாக கூறி, மக்கள் திசை திருப்ப முயற்சி நடக்கிறது. ஆனால் மக்கள் உண்மைகளை அறிந்துள்ளனர்.
குறி வைத்து தாக்கப்படுவதை தமிழகம் முழுவதும் மக்கள் இன்று கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். காவல்துறை சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது, மக்களின் உணர்வாக இருக்கிறது.
கொலைக்கான சதித்திட்டங்கள் சிறையிலேயே தீட்டப்படுகிறது. காவல்துறை விழிப்புடன் செயல்பட்டிருந்தால் கொலைகளை தடுத்திருக்க முடியும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications