தெலுங்கானா எதிரொலி- கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரி 72 மணி நேர பந்த்

மேற்கு வங்க மாநிலத்தில் டார்ஜிலிங்கை சுற்றிய மலைப் பகுதிகளை ஒருங்கிணைத்து கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. கடந்த 20 ஆண்டுகாலமாக நீடித்து வருகிறது இக்கோரிக்கை. இதற்கான போராட்டத்தில் பலரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விவகாரத்துக்கு தீர்வு காணும் முதல் முயற்சியாக 1980களின் இறுதியில் கூர்க்கா ஹில் கவுன்சில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2011ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநில அரசு, மத்திய அரசு மற்றும் கூர்க்காலாந்து ஜன்முக்தி மோர்ச்சா ஆகியவை இணைந்து முந்தைய ஹில் கவுன்சிலை விட கூடுதல் அதிகாரம் கொண்ட ஜிடிஏ எனப்படும் கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாக அமைப்பை உருவாக்கின. அதுதான் தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில்தான் ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா உருவாக்கப்பட இருக்கும் செய்திகள் வெளியாகின. தெலுங்கானா உருவாக்குவது நியாயம் எனில் கூர்க்காலாந்தையும் தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூர்க்காலாந்து ஜன்முக்தி மோர்ச்சா இன்று முதல் 3 நாள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதைத் தொடர்ந்து கூர்க்காலாந்து பகுதியில் அனைத்து சந்தைகளும் மூடப்பட்டுள்ளன. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. சிலிகுரியில் இருந்து டார்ஜிலிங் செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை மிகவும் சொற்பமாக இருக்கிறது. இன்றைய முழு அடைப்பின் போது கடைகளை மூட கட்டாயப்படுத்தியதாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications