தொங்கு பார்லிமென்ட்! தே.ஜ.கூட்டணிக்கு கூடுதல் இடங்கள்: கருத்துக் கணிப்பு!

அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தற்போதைய சூழலில் தேர்தல் நடைபெற்றால் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியானது 172 முதல் 180 இடங்கள் வரை கைப்பற்றும். அக் கூட்டணி 29% வாக்குகளைப் பெறும். இக்கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியானது 156-164 இடங்களைக் கைப்பற்றலாம். அதாவது 27% வாக்குகள் கிடைக்கும். கடந்த தேர்தலில் 18.8% வாக்குகள் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் கூட்டணிக் கட்சிகள் 13-19 எம்.பிக்கள் (2%) வரை வெல்லலாம். கடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சிகள் 2.7% வாக்குகளைக் கொண்டு சேர்த்திருந்தன.
காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியானது 149 முதல் 153 இடங்களையே கைப்பற்றும். இக் கூட்டணி கடந்த தேர்தலில் 36% வாக்குகளைப் பெற்றிருந்தது. தற்போது 29% வாக்குகள் கிடைக்குமாம்.
இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் 28% வாக்குகள் கிடைக்கலாம். அதாவது முந்தைய தேர்தலைப் போல அதன் வாக்கு சதவீதம் இருக்கும். ஆனால் முந்தைய தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகள் மூலம் கிடைத்த 3% வாக்குகள் இம்முறை 1% ஆகக் குறையக் கூடும்.
இந்த இரண்டு கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் 42% வாக்குகள் கிடைக்கும்.
இதில் பகுஜன் சமாஜ் கட்சி 15-19 இடங்களையும் (6%) இடதுசாரிகள் 22-28 (6%)இடங்களையும் பெறும். சமாஜ்வாடி கட்சி 4% வாக்குகளைப் பெற்று 17- 21 இடங்களைக் கைப்பற்றலாம்.
மத்தியில் ஆட்சி அமைக்க 273 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் சரி, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் சரி சுமார் 100 இடங்கள் கூடுதலாக தேவை. இதனால் இதர கட்சிகள் ஆதரவின்றி எந்த ஒரு தேசிய கட்சியும் மத்தியில் ஆட்சி அமைத்துவிட முடியாது என்பது இம்முறையும் நிதர்சனம்.












Click it and Unblock the Notifications