இங்கிலாந்து வீதிகளில் ‘ஸ்கேர்குரா’ திருவிழா: அதாங்க நம்ம ‘சோளக்காட்டு பொம்மைத் திருவிழா’....
மஸ்டன்: நம்மூர் கிராமங்களில் வயலில் வந்து உட்கார்ந்து பயிர்களைச் சேதப்படுத்தும் காக்கா, குருவிகளை விரட்ட சோளக்காட்டு பொம்மைகளைப் பார்த்திருப்போம்.
ஆனால், இங்கிலாந்தில் இத்தகைய சோளக்காட்டு பொம்மைகளை வைத்து ஒரு கலப்ர்புல் திருவிழாவே நடத்தியிருக்கிறார்கள்.
இங்கிலாந்தில் நடைபெறும் இத்திருவிழாவினால், ஊரே கொலு வைத்த எபக்ட்டில் களைக் கட்டுகிறது....

ஸ்கேர்குரோ திருவிழா...
கடந்த 1999ம் ஆண்டு, இங்கிலாந்தின் நார்த் யார்க்ஷயரில் உள்ள மஸ்தான் என்ற சிற்றூரில் ஆரம்பிக்கப்பட்டது ஸ்கேர்குரோ என்றழைக்கப்படும் சோளக்காட்டு பொம்மைத் திருவிழா.

அதிகரிக்கும் பொம்மைகள்...
மக்களின் ஆதரவைத் தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் பொம்மைகளின் எண்ணிக்கை கூடிய வண்ணம் உள்ளது.

வானிலை சதி...
மோசமான வானிலை காரணமாக சென்ற ஆண்டு மட்டும் இந்த ஸ்கேர்குரோ நடை பெறவில்லை.

டபுள் டமாக்கா...
சென்ற வருடத்து சந்தோஷத்தையும் சேர்த்து,இந்த வருடம் தூள் கிளப்பி விடப் போகிறார்களாம் கலந்து கொள்ள இருப்பவர்கள்.

ரகசியம்... பரம ரகசியம்...
ஆகஸ்ட் 4 ந்தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் வைக்கப்படும் தங்களின் பொம்மைகள் குறித்த திட்டங்களை பொதுமக்கள் ரகசியமாக வைத்துள்ளனராம் மக்கள்.

கொலு பொம்மைகள்...
மக்களின் கைவண்ணத்தில் உருவான பொம்மைகள் தெருக்களிலும், நடைபாதையிலும், வீட்டு மேற்கூரைகளிலும் மற்றும் பூங்காக்களிலும் கொலு வீற்றிருக்கப் போகின்றன.

சந்தோஷத் திருவிழா...
மக்கள் ரசிக்கும் திருவிழாவான இதில் சந்தோஷம் கரை புரண்டோடும் என விழா அமைப்பாளரில் ஒருவரான காட்ஃபிரே நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications