ஸ்பெக்ட்ரம் வழக்கு..யுனிடெக் எம்.டி.க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமத்தை யுனிடெக் நிறுவனம் முறைகேடாக பெற்றது.. யுனிடெக் நிறுவனத்துக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா செயல்பட்டார் என்பது சிபிஐ வழக்கு. இந்த வழக்கில் சிபிஐ வழக்கறிஞர் ஏ.கே.சிங்குடன் யுனிடெக் எம்.டி.யான சஞ்சய் சந்த்ரா ரகசியமாக பேசிய டேப் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து ஏ.கே.சிங் நீக்கப்படுவதாக சிபிஐ அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் சஞ்சய் சந்த்ராவுக்கு ஏற்கெனவே வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிபிஐ மனுத்தாக்கல் செய்தது. இம்மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிங்வி மற்றும் முகோபாத்யாயா பெஞ்ச் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க சஞ்சய் சந்த்ராவுக்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications