தன் மகளை காதலித்ததால் என் தம்பியை ஓட ஓட விரட்டி அடித்தார் சேரன்: அக்கா பத்மா
சென்னை: இயக்குனர் சேரனின் மகள் தாமினியை காதலிப்பதால் தனது தம்பி ஓட ஓட விரட்டி தாக்கப்பட்டதாக சந்துருவின் அக்கா பத்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என் தம்பி சந்துரு இயக்குனர் சேரனின் மகள் தாமினியை காதலிப்பதை அறிந்து நாங்கள் வருத்தப்பட்டோம். பல நல்ல படங்களை இயக்கிய பெரிய இயக்குனர் அவர். அவரின் மனம் கஷ்டப்படும். அதனால் இந்த காதல் வேண்டாம் என்று என் தம்பியை கண்டித்தோம். ஆனால் ஒரு நாள் சேரன் எங்கள் வீட்டுக்கு வந்து நான் என் மகளின் காதலை எதிர்க்கப்போவதில்லை. அவள் படிப்பு முடிந்ததும் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
அவர் கூறியதைக் கேட்டு நாங்கள் சந்தோஷப்பட்டோம். ஆனால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சேரனின் ஆட்கள் எங்கள் வீட்டுக்கு வந்து தாமினியை மறக்குாறு சந்துருவை மிரட்டினார்கள். பின்னர் சேரனும் வந்து மிரட்டினார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோடம்பாகத்தில் சேரனும், அவரது ஆட்களும் சேர்ந்து எனது தம்பியை ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர்.
மேலும் சேத்துப்பட்டு போலீசில் பொய் புகார் கொடுத்து தாமினியை இனி பின் தொடர மாட்டேன் என்று என் தம்பியிடம் எழுதி வாங்கியுள்ளனர். என் தம்பியின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதனால் அவரை வெளியூரில் ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications