For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொண்டேபுடுவோம்... கணவனை மிரட்டித் தாக்கியதாக மனைவி மற்றும் குடும்பத்தார் மீது புகார்

Google Oneindia Tamil News

ஈரோடு: குடும்பப் பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் தன்னை தனது மனைவியும், அவரது குடும்பத்தினரும் கொலை மிரட்டல் விடுப்பதாக போலீஸார் ஒருவர் புகார் கூறியுள்ளார். இதையடுத்து மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள நகலூரை சேர்ந்தவர் சேகர். 32 வயதான இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். ஆனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் சேகரை அவரதுமனைவி சங்கீதா, உறவினர்கள் சுமதி, செல்வராணி, பன்னீர்செல்வம், காமராஜ் ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் சேகர். புகாரைப் பதிவு செய்த போலீஸார் அந்த ஐந்து பேர் மீதம் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சம்பவத்தின்போது காயமடைந்த சேகர், அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

English summary
A 32 year old man was attacked by his wife and relatives near Erode.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X