Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசாமில் ‘பிரசாதம்’ சாப்பிட்ட 60 பேருக்கு வயிற்றுவலி, வாந்தி, மயக்கம் : 10 பேர் கவலைக்கிடம்

Subscribe to Oneindia Tamil

ராங்கியா: அசாமில், வீட்டில் நடத்தப்பட்ட பூஜையில் வழங்கப்பட்ட பிரசாதத்தைச் சாப்பிட்ட 60 பேருக்கு வயிற்று வலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களின் 10 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

நேற்று, அசாம் மாநிலம் காம்ரப் மாவட்டத்தில் நபாபூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதச் சடங்கு நிகழ்ச்சி நடந்தது. பிரார்த்தனையின் முடிவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது. பிரசாதத்தை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு வயிற்றுவலியும், அதனைத் தொடர்ந்து வாந்தி, மயக்கமும் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவியோடு அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டனர். அவர்களில் 10 குழந்தைகள் மொத்தம் 60 பேர் பாதிக்கப் பட்டிருந்தனர். அவர்களில் 10 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த போலீசார் மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கிருந்த பிரசாதத்தை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் நடந்த சம்பவத்தின் பிண்ணனியில் சதிச்செயல் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசாத மாதிரியின் ஆய்வு முடிவு வெளி வந்த பிறகே, பாதிக்கப் பட்டவர்களின் வாந்தி, மயக்கத்திற்கான காரணம் புலப் படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+