தனித் தெலுங்கானாவின் முதல் முதலமைச்சராக தலித்தை நியமிப்போம்: சந்திரசேகர ராவ்
Subscribe to Oneindia Tamil

தனித் தெலுங்கானாவில் தனக்கு முதலமைச்சராகும் எண்ணம் இல்லை என்பதை தெளிவு படுத்தும் வகையில் நேற்று பேட்டியளித்துள்ளார் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ்.
இது குறித்து ஹைதராபாத்தில் சந்திரசேகர ராவ் கூறியதாவது , ‘தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட்ட பின்னர் எங்கள் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெறும் தலித் எம்.எல்.ஏ.வை புதிய முதலமைச்சராக நியமிப்போம். தெலுங்கானாவின் மொத்த மக்கள் தொகையான 3.5 கோடி பேரில் 85 சதவீத மக்கள் பின்தங்கிய, பட்டியல் இன, சிறுபான்மை பிரிவுகளை சேர்ந்தவர்கள்.
முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் நான் பங்கேற்க மாட்டேன். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தெலுங்கானா மாநில அரசின் உயர்மட்ட ஆலோசனை குழுவில் இடம் பெறுவேன்' என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications