தம்பதியர் சண்டை... மகளை கூவத்தில் வீசி தந்தை தற்கொலை
சென்னை: சென்னையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மகளை கூவம் ஆற்றில் தள்ளிவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையாறு திரு.வி.க. பாலத்திற்கு இன்று காலையில் ஒருவர் தனது 9 வயது மகளுடன் வந்தார். அப்போது, அங்கு வந்த மனைவியுடன் அவர் சண்டை போட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே சண்டை அதிகரித்ததால் ஆத்திரம் அடைந்த கணவர், தனது மகளை திடீரென தூக்கி கூவத்தில் வீசியதோடு அவரும் குதித்தார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த மனைவி, சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் ஆற்றில் குதித்து சிறுமியை மீட்டனர். ஆனால், அந்தப் பெண்ணின் கணவரை மீட்க முடியவில்லை. அவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெற்ற மகளையே கூவத்தில் வீசிவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications