பிரேசில் சிறைக்கலவரம்: கைதிகளைக் கொன்ற 25 காவலர்களுக்கு 624 ஆண்டுகள் சிறை
Subscribe to Oneindia Tamil

பிரேசில் நாட்டில் உள்ளது சாவோ பவுலோஸ் என்ற ஜெயில். இங்கு 1992-ம் ஆண்டு கைதிகள் இடையே பயங்கர கலவரம் உண்டானது. கலவரத்தை அடக்க போலீசார் கடும் முயற்சிகள் மேற்கொண்டனர். இந்தக் கலவரத்தில் சுமார் 111 கைதிகள் பரிதாபமாக பலியானார்கள். அவர்களில் 52 கைதிகள் போலீசாரின் குண்டடியில் பலியானவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
எனவே, போலீசார் மிகவும் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டதாக, அவர்கள் மீது வழக்கு தொடரப் பட்டது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலே நடைபெற்ற வழக்கில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட 25 போலீஸ் அதிகாரிகளுக்கு தனித்தனியே 624 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை வழங்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications