ஹிமாச்சல், அருணாச்சலை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த சீனா தயாராகிறது: முலாயம்சிங் யாதவ்

Subscribe to Oneindia Tamil

What is government doing to stop border attacks: Mulayam Singh Yadav
டெல்லி: ஹிமாச்சல் பிரதேசம், அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களை உரிமை கோரி தாக்குதல் நடத்த சீனா தயாராகி வருகிறது என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பலியானது தொடர்பாக பேசிய முலாயம்சிங், எல்லைகளில் சீனாவின் ஊடுருவல்கள் மற்றும் பாகிஸ்தான் தாக்குதல்களில் இந்திய வீரர்கள் பலியாகும் சம்பவங்களைத் தடுக்க என்ன நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது? என்பதை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விவரிக்க வேண்டும்.

சீனாவையும் பாகிஸ்தானையும் நாம் நம்பக் கூடாது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி தொடர்ந்து சீனா இந்திய பகுதிக்குள் ஊடுருவி வருகிறது. இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி கொலை செய்து வருகிறது.

பாகிஸ்தானும் சீனாவும் ரகசியமான புரிதலுடனேயே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இரு நாடுகளுமே எல்லைக்கு மிக அருகே ஊடுருவுகின்றன. நாட்டின் பாதுகாப்பு குறித்து லோக்சபா கவலை கொள்கிறது.

ஹிமாச்சல் பிரதேசம், அருணாச்சல் பிரதேசத்துக்கு உரிமை கோரி நம் மீது தாக்குதல் நடத்த சீனா தயாராகி வருகிறது என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+