9 ஆண்டுக்குப் பின் நிரம்பி வழிகிறது அடவிநைனார் அணை!

Subscribe to Oneindia Tamil

செங்கோட்டை: தமிழக கேரளா எல்லைப் பகுதியில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இரண்டு மாநில மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 நீர்தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து சில அணைகள் நிரம்பியுள்ளன.

செங்கோட்டை தாலுகா மேக்கரையில் 92 ம் ஆண்டு ஏற்பட்ட புயல் மழையின் காரணமாக எராளமான சேதங்கள், நிலச்சரிவு, உயிர் பலிகள் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மேக்கரையில் தமிழக அரசு 132 அடி உயரத்தில் பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், வாவாநகரம், இடைகால், ஆய்க்குடி, சுந்தர பாண்டியபுரம், உள்ளிட்ட 10 ஊர்கள் நேரடியாகவும், மறைமுகமாக சில ஊர்களும் அப்பகுதியில் உள்ள மொத்தம் 15.ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெரும் விதம் அடவிநைனார் கோவில் அணையை கட்ட திட்டமிட்டு 1994ம் ஆண்டு அதற்கான பணிகளையும் தொடங்கியது.

2002 ம் ஆண்டு அணை கட்டி முடிக்கப் பட்டது. அதன் பின் 2004 ம் ஆண்டு ஒரே ஒரு முறை மட்டுமே அணை நிரம்பி வழிந்தது.அதன் பின் போதிய மழை இல்லாததால் அணைநி ரம்பவில்லை.இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வலுவடைந்ததால் இந்த அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை அதிகரித்துள்ளது.

Adavinainar dam reaches its FRL after 9 years

இன்று அதிகாலை 9 ஆண்டுகளுக்குப் பின் இந்த அணை முழு கொள்ளளவான 132அடி தாண்டி நிரம்பி வழியத் துவங்கியது. 9 ஆண்டுகளுக்கு பின் அணை நிரம்பி வழிவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

அணை நிரம்பி வழியும் அழகை காண சுற்றுலா பயணிகள், சுற்று வட்டாரப் பகுதி மக்கள் அணைப் பகுதியில் குவியத் துவங்கியுள்ளனர். தற்பபோது நிமிடத்திற்கு விநாடிக்கு 120 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+