ஹஜ் குழுவிற்கான மானிய உயர்வு: ஜெயலலிதாவுக்கு சரத்குமார் பாராட்டும், நன்றியும்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் இருந்து ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள் தேர்வு செய்தல், தேர்வு செய்யப்பட்ட பயணிகள் மெக்கா சென்று பாதுகாப்பாக திரும்பி வருவதற்கான அனைத்து உதவிகளைச் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்டு வரும் மானியத் தொகையை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தி, தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருப்பதைப் பாராட்டி வரவேற்கிறேன்.
சிறுபான்மை மக்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும், அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இஸ்லாமியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்து வரும் முதல்-அமைச்சரின், ஹஜ் குழுவினருக்கான மானிய அறிவிப்பு, சில தினங்களில் ரம்ஜான் திருநாளைக் கொண்டாட இருக்கும் இஸ்லாமிய சொந்தங்களுக்கு அளிக்கப்படும் ரம்ஜான் பரிசாகக் கருதி மகிழ்ச்சியையும், இஸ்லாமிய சமுதாயம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications