டெல்லியில் வீடு புகுந்து இளம்பெண்ணை சுட்ட 2 பேருக்கு வலை
டெல்லி: தென்கிழக்கு டெல்லியில் வீட்டில் இருந்த 17 வயது பெண் 2 பேரால் சுடப்பட்டார்.
தென்கிழக்கு டெல்லியில் உள்ள தக்ஷின்புரியைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவர் நேற்று மாலை வீட்டில் இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்துள்ளனர். அவர்கள் அந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து தாங்கள் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் அவரின் கழுத்தில் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்த அப்பெண் சாகெத்தில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிக ரத்தம் வெளியேறியுள்ளதால் அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
காதல் விவகாரம், தனிப்பட்ட பிரச்சனை இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அந்த 2 பேரையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications