ஜம்மு காஷ்மீரில் ராணுவ தலைமை தளபதி- பலியான வீரர்களுக்கு மரியாதை!
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பலியான 5 இந்திய ராணுவ வீரர்களுக்கு ராணுவ தலைமை தளபதி பிக்ரம்சிங் இன்று இறுதி மரியாதை செலுத்தினார்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை மோசமான வானிலை இருந்த போதும் பூஞ்ச் அருகே உள்ள நக்ரோட்டா பகுதிக்கு ராணுவ தலைமை தளபதி சென்றடைந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த 5 இந்திய ராணுவ வீரர்களின் உடல்களுக்கும் இறுதி மரியாதை செலுத்தினார்.












Click it and Unblock the Notifications