சு.சுவாமிக்கு ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு ஆவணங்களைத் தர சிபிஐக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

SC orders CBI give the documents to Swamy on Aircel case
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் தொடர்பான ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் அன்னியமுதலீடு தொடர்பான ஆவணங்களை ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், இந்தியாவின் ஏர்செல் நிறுவனப் பங்குகளை தொடக்கத்தில் விதிமுறைப்படி வாங்கியது. பின்னர் அன்னிய முதலீட்டு விதிகளை மீறி 99.5% வாங்கியுள்ளது என்பது சுப்பிரமணியன் சுவாமி புகார். இதனால் மேக்சிஸின் அனைத்து இந்திய முதலீடுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், மேக்சிஸின் இந்திய முதலீடு தொடர்பாக குறிப்பாக ஏர்செல் பங்குகளை வாங்கியது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமக்கு வழங்கக் கோரியிருந்தார்.

இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், சுப்பிரமணியன் சுவாமிக்கு உரிய ஆவணங்களை வழங்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+