முதியோர் பென்ஷனை வாரிச் சுருட்டி வாயில் போட்ட தாசில்தார் சஸ்பெண்ட்
தூத்துக்குடி: முதியோர் பென்சன் திட்டத்தில் முறைகேடு செய்ததாக விளாத்திகுளம் தாசில்தார் செல்வகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றி வருபவர் செல்வகுமார். இவர் பணியில் இருந்த போது தகுதி இல்லாத பலருக்கு முதியோர் பென்சன் வழங்கியதாகவும், இதன் பொருட்டு போலி ஆவணங்கள் தயார்செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து கலெக்டர் ஆசிஷ்குமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில் முதியோர் பென்சன் திட்டத்தில் முறைகேடு நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து தாசில்தார் செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் ஆசிஷ்குமார் உத்தரவிட்டார்.
செல்வகுமார், முதியோர் பென்சனுக்கு பணம் வாங்கி தவறான நபர்களை பரிந்துரை செய்த காரணத்தினாலேயே சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்பு டாஸ்மாக்கில் இருந்தார், அதன்பின்பு ஸ்ரீவைகுண்டம் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். அதன்பின்பு அங்கிருந்து இப்பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டார்.
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்தபோது தாமிரபரணி மணல் கொள்ளையர்களுக்கும், தாசில்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்
தற்போது செல்வகுமார் மூலம் மேற்கொள்ளப்பட்ட முதியோர் பென்சன் திட்ட கணக்கு வழக்குகள் மீதும் வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது போல் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கயத்தாறு ஓன்றியத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications