கடிநாய் வளர்த்தால்... இனி, உங்க மீதி வாழ்க்கை ஜெயில்ல தான்: இங்க இல்ல பாஸ், இங்கிலாந்துல...
லண்டன்: யாராவது பொதுமக்களை கடிக்கும் கடிநாய்களை வைத்திருந்தால், அவர்களுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கும் புதிய சட்டம் விரைவில் அமலுக்கு வ்ர இருக்கிறது இங்கிலாந்தில்.
பொதுவாக நாய்க்கடி என்பது உலகலாவிய அளாவில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நாய்க்கடியால் பாதிக்கப் படுகின்றனர். பலர் பரிதாபமாக உயிரிழக்கிறார்கள்.
அத்தகைய கொடூர நாய்களை வளார்க்கும் ஓனர்களுக்கு தண்டனை தந்தால், கடி நாய்த் தொல்லையை ஓரளவுக்கு குறைத்து விடலாம் என நம்புகிறது இங்கிலாந்து அரசு.

நாய்க்கடி சிகிச்சை...
வருடந்தோறும் கிட்டத்தட்ட 2 லட்சம் மக்கள் நாய்க்கடி சிகிச்சை பெற்று வருகிறார்களாம் இங்கிலாந்தில். இங்கிலாந்தில் வருடந்தோறும் நாய்க்கடி வைத்தியம் மட்டும் 30 லட்சம் பவுண்டுகள் செலவாவது குறிப்பிடத்தக்கது.

பரிதாபப் பலி....
கடந்த ஆண்டுகளில் மட்டும் சுமார் 16 பேர் நாய் கடித்ததினால் இங்கிலாந்தில் பரிதாபம பலியாகியுள்ளனர்.

உரிமையாளரே பொறுப்பு...
நாய்களை தண்டிப்பதோடு அத்தகைய கடி நாய்களை சுதந்திரமாக உலவ விட்டு , பொதுமக்கள் பாதிப்படைய காரணமாக இருக்கும் உரிமையாளருக்கே அதிக தண்டனை வழங்க வேண்உம் என்பது பாதிக்கப்பட்டோரின் அறிவுறுத்தல்.

2 ஆண்டுகள் சிறை...
ஏற்கனவே, கடி நாய் வளர்ப்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் வழங்கும் சட்டம் இங்கிலாந்தில் அமலில் உள்ளது.

பொதுமக்கள் எதிர்ப்பு...
ஆனால், இந்தச் சட்டத்தால் திருப்தியடையாத பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தொடர்ந்து தெரிவித்து வந்தனர். மேலும் தண்டனை அளவை அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர்.

புதிய சட்டம்....
இதனைத் தொடர்ந்து, இந்த சட்டத்தை திருத்தி, காயத்தை ஏற்படுத்திய நாய்களின் உரிமையாளருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனையும், உயிரிழப்பை ஏற்படுத்தும் நாய்களின் உரிமையாளருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்குவதை வகை செய்யும் புதிய சட்டத்தை இயற்ற இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருகிறது.

செப்டம்பர் ரிலீஸ்...
செப்டம்பர் மாதத்தில் இந்த புதிய சட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications