கற்பழிக்க வந்தவனை 'கட்' செய்து விரட்டிய பெண்!

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ஒரிசாவில் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரி்ன் ஆணுறுப்பை கூரிய ஆயுதத்தால் வெட்டி விரட்டியுள்ளார் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்.

வெட்டுப்பட்டு தப்பியோடிய நபர் அடுத்த நாள் போலீஸில் போய் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

ஜகத்சிங்பூர் என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று, அந்தப் பெண் கோவிலுக்குப் போய் விட்டுத் திரும்பியுள்ளார். அப்போது வழியில் இரண்டு பேர் சேர்ந்து அப்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார்.

அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடினார் அப்பெண். அருகில் இருந்த கோவிலுக்குள் போய் அடைக்கலம் புகுந்தார். கோவில் என்றும் அப்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றனர் அந்த காமுகர்கள்.

இதையடுத்து ஆவேசமடைந்த அப்பெண், கோவிலுக்குள் கிடந்த ஒரு கூரிய ஆயுதத்தை எடுத்து படு வேகமாக தன் மீது பாய்ந்த நபரின் ஆணுறுப்பைப் பிடித்து ஆவேசமாக அறுத்து விட்டார். இதில் வலியால் துடித்த அந்த நபர் பலாத்காரத்தைக் கைவிட்டு விட்டு உயிரைக் காக்க வெளியே ஓடினார். கூடி வந்த நபரும் தலை தெறிக்க ஓடினார்.

பின்னர் அந்த நபர் மருத்துவமனையில் போய்ச் சேர்ந்தார். அடுத்த நாள் கட்டுப் போட்ட நிலையில், போலீஸாரிடம் போய் புகார் கூறினார். போலீஸார் புகாரைப் பதிவு செய்துள்ளனர். இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

அடிபட்ட அந்த நபர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+