ஜார்க்கண்டில் 2 சிறுமிகள் 4 பேரால் கற்பழிப்பு
பாகூர்: ஜார்க்கண்டில் 2 சிறுமிகள் 4 பேரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் பாகூர் மாவட்டத்தில் உள்ளது கட்சோரா கிராமம். அந்த கிரமாத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் 4 பேரால் நேற்று இரவு கற்பழிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இன்று காலை அந்த கிராமத்திற்கு சென்ற சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த சிறுமிகளை அதே கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் கற்பழித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னதாக கடந்த மாதம் 14ம் தேதி இதே பாகூர் மாவட்டத்தில் உள்ள வேறொரு கிராமத்தில் இருக்கும் விடுதியில் இருந்து 4 பழங்குடியின சிறுமிகள் கடத்தி கற்பழிக்கப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மேலும் 2 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications