லாகூர் தூதரகத்தை விட்டு வெளியேறுங்கள் - அதிகாரிகளுக்கு அமெரிக்கா உத்தரவு
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: தீவிரவாதத் தாக்குதல் மிரட்டலைத் தொடர்ந்து லாகூரில் உள்ள தனது நாட்டுத் தூதரகத்தில் தங்கியுள்ள அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
லாகூர் தூதரகத்தில் உள்ள அவசரமற்ற பணிகளைப் பார்க்கும் ஊழியர்கள், அதிகாரிகள் வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. லாகூர் அமெரிக்க தூதரக அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று மிரட்டல் வந்திருப்பதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் தனது தூதரகங்களை தற்காலிகமாக மூடியது அமெரிக்கா என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications