சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட பள்ளிகளுக்கு அறிவுரை
சென்னை: இந்தியாவின் சுதந்திர தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தமிழக பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை எப்படிக் கொண்டாட வேண்டும் என்றும் பள்ளிக்கூடங்களுக்கு சுற்றறிக்கையும் விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான சுற்றறிக்கையை பள்ளிக் கல்வி இயக்குநரகம் அனுப்பி வைத்துள்ளது.
சிறப்பாக கொண்டாட வேண்டும்
அதில் சுதந்திர தினத்தை அனைத்துப் பள்ளிகளும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும்.

கண்காட்சி நடத்துங்கள்
சுதந்திர தினம் குறித்த கண்காட்சிகளை பள்ளிக்கூடங்கள் நடத்த வேண்டும்.
மரம் நடுங்கள்
மரம் நடும் நிகழ்ச்சியையும் தவறாமல் அனைத்துப் பள்ளிகளும் நடத்த வேண்டும்.
விளையாட்டுப் போட்டிகள் நடத்துங்கள்
மேலும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள், கலைப் போட்டிகளை நடத்த வேண்டும்.
நாடகம் போடுங்கள்
மேலும் தியாகிகள், சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்த மேடை நாடகங்கள் நடத்தப்பட வேண்டும்.
அறிக்கை அனுப்புங்கள்
சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்குப் பின்னர் அதுதொடர்பான அறிக்கையை அனைத்துப் பள்ளிகளும் புகைப்படங்களோடு அனுப்பி வைக்க வேண்டுமாம்.
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
சுதந்திரப் போராட்டம், நாட்டுக்காக போராடிய தலைவர்கள் குறித்த விவரங்களை மாணவர்களுக்கு புகட்டும் வகையில் இந்த கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும். வெறும் கொடியேற்றி, மிட்டாய் கொடுப்பதோடு நின்று விடக் கூடாது என்றும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications