சவுதியில் 46 பேரை பலி வாங்கிய ‘மெர்ஸ்’ நோய்: ஒட்டகங்கள் தான் காரணமா...?
ஜெட்டா: சமீபத்தில், சவுதி அரேபியாவில் 46 பேரை பலி வாங்கிய வினோத நோயான ‘மெர்ஸ்' நோய் ஒட்டகங்கள் மூலம் பரவியிருக்கலாம் என முதல்கட்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
கடந்த சில மாதமாக, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் மர்ம நோய் ஒன்று வேகமாக வரவி வருகின்றது. இந்நோய்க்கு இதுவரை சவுதி அரேபியா, ஜோர்டன், கர்த்தார், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, துனிசியா ஆகியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் 46 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
இதேபோன்று, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சார்ஸ் என்ற கிருமி மூலம் பரவிய மர்ம நோயால் ஆசியாவில் பலர் பலியாயினர். தற்போதும் அதே போன்று பரவி வரும் இந்த விநோத நோய்க்கிருமிக்கு ‘மெர்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்நோய்க்கான தடுப்பு மருந்து மற்றும் குணமாக்கும் மருந்து ஆகியவற்றைக் கண்டறியும் முயற்சியில் ஆராய்ச்சியாளார்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் முதல்கட்டமாக, இந்த நோய் பரவுவதற்கான முக்கிய காரணியாக ஒட்டகங்கள் இருக்கலாம் என சந்தேகித்தனர்.
அதனைத் தொடர்ந்து நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் 'மெர்ஸ்' மர்ம நோய், ஓமன் நாட்டில் உள்ள சிலவகை ஒட்டகங்களின் மூலம் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது குரிப்பிடத்தகக்து.












Click it and Unblock the Notifications