மணிப்பூர் முதல்வர் வீட்டருகே 5 நாட்களில் 2வது முறையாக சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு

Subscribe to Oneindia Tamil

Bomb blast
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் முதல்வரின் வீட்டருகில் மீண்டும் சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர் மாநில முதல்வராக ஒக்கரம் இபோபி சிங் பதவி வகித்து வருகிறார். இவரது அதிகாரபூர்வ அரசு இல்லம் இம்பாலில் உள்ள மாநில போலீஸ் தலைமை அலுவலகம் அருகே உள்ளது.

மணிப்பூரில் இயங்கி வரும் 'போராளி குழுக்கள் சுதந்திர தின விழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

இதனையொட்டி, இம்பால் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு அதிகம் நிறைந்த மாநில போலீஸ் தலைமையகம் அருகே உள்ள முதல்வரின் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை 6.20 மணிக்கு முதல்வர் ஒக்கரம் இபோபி சிங் வீட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்த போலீசார், பாதுகாப்பு நிறைந்த அப்பகுதியில் குண்டினை வெடிக்கச் செய்தது யார்? என்பது தொடர்பாக தீவிர விசாரரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த 10ம் தேதியும் இவரது வீட்டருகே குண்டு வெடித்தது. இப்போது இரண்டாவது முறையாக குண்டு வெடித்துள்ளது. மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+