For Daily Alerts
Just In
சுதந்திர தினத்தன்றும் தாக்குதல் நடத்திய பாக்.. இந்திய ராணுவ வீரர் காயம்!
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் இராணுவம் நடத்தி வரும் தாக்குதல்கள் தொடர்கின்றன. கடந்த 4 நாட்களில் மட்டும் 9 முறைகள் தாக்குதலை நடத்தியிருக்கிறது பாகிஸ்தான்.
இந்நிலையில் சுதந்திர தினமான இன்றும் பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பூஞ்ச் பகுதியில் மெந்தார் என்ற இடத்தில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.
Comments
English summary
Pakistani troops violated the ceasefire yet again by firing at Indian posts along the LoC in Poonch district of Jammu and Kashmir
Story first published: Thursday, August 15, 2013, 12:49 [IST]