தேமுதிக தலைமையகத்தில் விஜயகாந்த் கொடி ஏற்றி மிட்டாய் கொடுத்தார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இந்தியாவின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, கழகத் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கழக பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன், கழக தலைமை நிலைய செயலாளர் ப. பார்த்தசாரதி, எம்.எல்.ஏ., கழக துணை செயலாளர் எஸ். ஆஸ்டின், கழக இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இனிப்புகள் தவிர பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சீருடைகளையும் வழங்கினார் விஜயகாந்த். அதேபோல கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.













Click it and Unblock the Notifications