For Daily Alerts
Just In
67வது சுதந்திர தினம்.. கோட்டை கொத்தளத்தில் 13வது முறையாக கொடியேற்றிய முதல்வர் ஜெ.!
சென்னை: நாட்டின் 67-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று காலை தேசியக் கொடியேற்றி வைத்து உரை நிகழ்த்தினார்.
இன்று காலை கோட்டை கொத்தளத்துக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் காலை 9 மணியளவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார். கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியேற்றுவது இது 13வது முறை.
இந்த உரையைத் தொடர்ந்து கல்பனா சாவ்லா விருது, சமூக சேவகர்களுக்கான விருதுகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வரின் சிறப்பு பதக்கங்களும் வழங்கப்பட்டன.
English summary
The 67th Independence day of the nation was celebrated ceremoniously across the country.In Chennai, the chief minister of Tamilnadu Jayalalithaa hoisted the flag from the ramparts of Fort St George and delivered the Independence day address.