சார்க் ஒப்பந்தம்: ஒரு பெண் உட்பட 9 ஆயுள் கைதிகளை இந்தியாவிடம் ஒப்படைத்தது இலங்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: ‘சார்க்' ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைச் சிறையில் வாடிய 9 இந்திய ஆயுள் தண்டனைக் கைதிகளை இந்தியா வசம் ஒப்படைத்துள்ளது இலங்கை.

போதைப்பொருள் வழக்கில் இலங்கை நாட்டின் நீதித்துறையால் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்ட 9 இந்தியக் கைதிகளை விடுவித்துள்ளது இலங்கை அரசு. ‘சார்க்' ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது.

Saarc

முதல்கட்டமாக ஒரு பெண் உள்பட 4 கைதிகளை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்திய தூதரக அதிகாரியிடம் ஒப்படைத்தனர் இலங்கை அதிகாரிகள். அடுத்தபடியாக சுதந்திர தினமான நேற்று, 5 கைதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா வந்துள்ள இவர்கள், தங்களது மீதி தண்டனை காலத்தை இந்திய சிறையில் கழிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார் இலங்கை சிறைத்துறை அதிகாரி குலதுங்கா. ஏற்கனவே, இதே போன்று 20 கைதிகள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வசம் இலங்கையால் ஒப்படைக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+