தமிழ்நாட்டை காப்பியடிக்கும் டெல்லி... ரூ.50க்கு மலிவு விலையில் வெங்காயம் விற்பனை
டெல்லி: வெங்காயம் விலை கிலோ 100 ரூபாயாக உயர்ந்திருப்பதால் மக்களின் நலன் கருதி டெல்லியில் சுமார் 1000 இடங்களில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.50க்கு மாநில அரசு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் காய்கறிகள் விலை உச்சத்தை தொட்டதை அடுத்து தமிழக அரசு பசுமை பண்ணை காய்கறி கடைகளை அறிமுகம் செய்தது. சென்னையில் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டுள்ள இந்த காய்கறி கடைகள் மூலம் மலிவு விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதேபோல டெல்லி மாநில அரசும் மலிவு விலையில் வெங்காயம் விற்பனையை தொடங்கியுள்ளது. 150 வேன்களில் சனிக்கிழமை காலை முதல் வெங்காய விற்பனை செய்யும் பணியை மாநில அரசு துவக்கியுள்ளது. ஒவ்வொரு வேனும், நான்கு இடங்களில் வெங்காயம் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லாபமும் இல்லாமல் நட்டமும் இல்லாமல், வெங்காயத்தை வாங்கிய விலையில் விற்பனை செய்து மக்களின் நலனைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது மாநில அரசு என்று தில்லியின் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் ஹருன் யூசுப் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications