பகத் சிங் தியாகி இல்லையா?... பிரதமர் சொல்லும் விளக்கம் என்ன??

வெள்ளையர்களுக்காகப் போராடி தனது இன்னுயிரை தூக்குக் கயிற்றிடம் கொடுத்து வீர மரணம் அடைந்தவர் பகத்சிங். ஆனால் அவருக்கு வீர மரணம் அடைந்தவர் என்ற அடைமொழியைக் கொடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக கேட்கப்பட்ட ஆர்.டி.ஐ. கேள்விக்கு, பகத் சிங்குக்கு தியாகி அடைமொழி தரப்படவில்லை என்று உள்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. மேலும் அவருக்கு அப்படி ஒரு பட்டம் தரப்பட்டதா என்ற தகவலும் தங்களிடம் இல்லை என்றும் கூறியுள்ளது.
இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்குகையில், ஆவணங்களை வைத்துத்தான் பகத்சிங்கின் வீரத்தை பிறர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. அவரது தியாகம், தீரம் வரலாறு அறிந்தது.
பகத்சிங்கின் தியாகத்தையும், தீரத்தையும், வீர மரணத்தையும் யாரும் கேள்வி கேட்க முடியாது. பகத்சிங் குறித்த இந்த விவகாரம் நாட்டு மக்கள் மனதைப் புண்படுத்துவதாக உள்ளது. நமது தியாகிகளுக்கும், நாட்டுக்காகப் போராடியவர்களுக்கும் நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
நாட்டுக்காக வீரத் தியாகம் செய்தவர் பகத்சிங் என்பது உண்மை, வரலாறு. அதை ஆவணத்தில் சொல்லித்தான் அறிய வேண்டும் என்பதில்லை. நமது தேசிய பாரம்பரியத்தில், வீரத் தியாக வரலாற்றில் பகத்சிங்கும் ஒரு அங்கம் என்று அவர் விளக்கியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இதுபோன்ற சர்ச்சையான விஷயங்களில் மக்கள் கவனம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சர்ச்சைகளை ஏற்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். இதனால் பகத்சிங் மற்றும் மற்ற தியாகிகளுக்கு அவதூறு ஏற்படுவதை நாம் உணர வேண்டும் என்றார்.
இதற்கிடையே, பகத்சிங்குக்கு வீரத் தியாகி என்ற அடைமொழியை வழங்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தப் போவதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications