Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை வழியாக ஊடுறுவி மதுரையில் பயங்கர தாக்குதல்.. 8 தீவிரவாதிகளுக்கு பாக். பயிற்சி!

Subscribe to Oneindia Tamil

மும்பை: பாகிஸ்தானில் தீவிரவாதப் பயிற்சி பெற்று, இலங்கை வழியாக தென்னிந்தியாவுக்குள் ஊடுறுவி பயங்கரவாத செயல்களில் ஈடுபட 8 பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக மகாராஷ்டிர போலீஸார் எச்சரித்துள்ளனர்.

மத்திய உளவுப் பிரிவு தகவல்களை மேற்கோள் காட்டி இந்த எச்சரிக்கையை மகாராஷ்டிர காவல்துறை விடுத்துள்ளது.

தற்போது பாகிஸ்தான் தீவிரவாத முகாமில் இதற்காக இந்த 8 பேருக்கும் தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த 8 தீவிரவாதிகளில் 4 பேர் பஞ்சாபிகள் ஆவர். மற்றவர்கள் காஷ்மீரிகள் ஆவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை ஸ்டைலில்

மும்பை ஸ்டைலில்

இந்த எட்டு பேரையும் யாழ்ப்பாணம் அருகே கடல் பகுதியில் இறக்கி விட பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனனராம். அதாவது எப்படி மும்பைக்கு கடல் மார்க்கமாக 10 தீவிரவாதிகள் ஊடுறுவினார்களோ அதுபோல.

மதுரை அல்லது மயிலாடுதுறையில் தாக்கலாம்

மதுரை அல்லது மயிலாடுதுறையில் தாக்கலாம்

இந்த தீவிரவாதிகளின் தாக்குதல் இலக்கு மதுரை அல்லது மயிலாடுதுறை என்று கூறப்படுகிறது.

இன்னும் சில மாதங்களில்

இன்னும் சில மாதங்களில்

இன்னும் சில மாதங்களுக்குள் இந்தத் தாக்குதல் நடைபெறலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தென் மாநிலங்கள் அனைத்துமே மிகுந்த உஷார் நிலையில் இருக்குமாறும் மத்திய உளவுப் பிரிவுகள் கேட்டுக் கொண்டுள்ளன.

3 பாகிஸ்தானியர்களைப் பிடித்த இலங்கை

3 பாகிஸ்தானியர்களைப் பிடித்த இலங்கை

கடந்த பிப்ரவரி 2ம் தேதி கொழும்பில் வைத்து 3 பாகிஸ்தானியர்கள் சிக்கினர். இவர்களை விசாரித்தபோது அடித்தி மும்பை, திருவனந்தபுரத்திற்கு இலங்கை பாஸ்போர்ட் மூலம் சென்றது தெரிய வந்தது.

சிங்கள மீனவர்களின் ஒத்துழைப்புடன்

சிங்கள மீனவர்களின் ஒத்துழைப்புடன்

இந்திய உளவுப் பிரிவுகள் மேலும் கூறுகையில், சிங்கள மீனவர்களின் ஒத்துழைப்புடன், தமிழகம் அல்லது கேரளாவுக்குள் ஊடுறுவ பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த சதித் திட்டத்தை லஷ்கர் இ தொய்பா அமைப்புதான் வடிவமைத்துள்ளது.

இலங்கை புதிய தீவிரவாத தளமாக மாறுகிறது

இலங்கை புதிய தீவிரவாத தளமாக மாறுகிறது

இலங்கையை தங்களது சதித் திட்டத்தின் பாதையாக மாற்றி வருகின்றன பல்வேறு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள். லஷ்கர் இ தொய்பா தவிர, பப்பர் கல்சா, ஜெய்ஸ் இ முகம்மது, ஜமாத் உத் தவா, அல் உமர் முஜாஹிதீன், ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவை இலங்கை வழியாக இந்தியாவைத் தாக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. தங்களது தீவிரவாத செயல்களுக்கு இலங்கையை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயன்படுத்த ஆரம்பித்திருப்பது பேராபத்தில் முடியும் என்றும் உளவுப் பிரிவுத் தகவல்கள் எச்சரிக்கின்றன.

என்ன செய்யப் போகிறது இந்தியா...?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+