இலங்கை வழியாக ஊடுறுவி மதுரையில் பயங்கர தாக்குதல்.. 8 தீவிரவாதிகளுக்கு பாக். பயிற்சி!
மும்பை: பாகிஸ்தானில் தீவிரவாதப் பயிற்சி பெற்று, இலங்கை வழியாக தென்னிந்தியாவுக்குள் ஊடுறுவி பயங்கரவாத செயல்களில் ஈடுபட 8 பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக மகாராஷ்டிர போலீஸார் எச்சரித்துள்ளனர்.
மத்திய உளவுப் பிரிவு தகவல்களை மேற்கோள் காட்டி இந்த எச்சரிக்கையை மகாராஷ்டிர காவல்துறை விடுத்துள்ளது.
தற்போது பாகிஸ்தான் தீவிரவாத முகாமில் இதற்காக இந்த 8 பேருக்கும் தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த 8 தீவிரவாதிகளில் 4 பேர் பஞ்சாபிகள் ஆவர். மற்றவர்கள் காஷ்மீரிகள் ஆவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை ஸ்டைலில்
இந்த எட்டு பேரையும் யாழ்ப்பாணம் அருகே கடல் பகுதியில் இறக்கி விட பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனனராம். அதாவது எப்படி மும்பைக்கு கடல் மார்க்கமாக 10 தீவிரவாதிகள் ஊடுறுவினார்களோ அதுபோல.

மதுரை அல்லது மயிலாடுதுறையில் தாக்கலாம்
இந்த தீவிரவாதிகளின் தாக்குதல் இலக்கு மதுரை அல்லது மயிலாடுதுறை என்று கூறப்படுகிறது.

இன்னும் சில மாதங்களில்
இன்னும் சில மாதங்களுக்குள் இந்தத் தாக்குதல் நடைபெறலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தென் மாநிலங்கள் அனைத்துமே மிகுந்த உஷார் நிலையில் இருக்குமாறும் மத்திய உளவுப் பிரிவுகள் கேட்டுக் கொண்டுள்ளன.

3 பாகிஸ்தானியர்களைப் பிடித்த இலங்கை
கடந்த பிப்ரவரி 2ம் தேதி கொழும்பில் வைத்து 3 பாகிஸ்தானியர்கள் சிக்கினர். இவர்களை விசாரித்தபோது அடித்தி மும்பை, திருவனந்தபுரத்திற்கு இலங்கை பாஸ்போர்ட் மூலம் சென்றது தெரிய வந்தது.

சிங்கள மீனவர்களின் ஒத்துழைப்புடன்
இந்திய உளவுப் பிரிவுகள் மேலும் கூறுகையில், சிங்கள மீனவர்களின் ஒத்துழைப்புடன், தமிழகம் அல்லது கேரளாவுக்குள் ஊடுறுவ பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த சதித் திட்டத்தை லஷ்கர் இ தொய்பா அமைப்புதான் வடிவமைத்துள்ளது.

இலங்கை புதிய தீவிரவாத தளமாக மாறுகிறது
இலங்கையை தங்களது சதித் திட்டத்தின் பாதையாக மாற்றி வருகின்றன பல்வேறு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள். லஷ்கர் இ தொய்பா தவிர, பப்பர் கல்சா, ஜெய்ஸ் இ முகம்மது, ஜமாத் உத் தவா, அல் உமர் முஜாஹிதீன், ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவை இலங்கை வழியாக இந்தியாவைத் தாக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. தங்களது தீவிரவாத செயல்களுக்கு இலங்கையை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயன்படுத்த ஆரம்பித்திருப்பது பேராபத்தில் முடியும் என்றும் உளவுப் பிரிவுத் தகவல்கள் எச்சரிக்கின்றன.
என்ன செய்யப் போகிறது இந்தியா...?
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications