குமாரசாமிபேட்டை சரவணனை ஆள் வைத்துக் கொல்ல முயன்ற அன்பு மனைவி அபீதா கைது!

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டையைச் சேர்ந்த சரவணன் எனபவரை கூலி்ப்படையை வைத்து கொல்ல முயன்ற வழக்கில் அவரது மனைவி அபீதாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இருவரும் என்ஜீனியர்கள். சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரிந்தனர். தனித் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து தர்மபுரி திரும்பினார் சரவணன். அப்போது சிலர் அவரைக் கொலை செய்ய முயன்றுள்ளனர். அதிலிருந்து தப்பி விட்டார் சரவணன். தனது மனைவிதான் ஆட்களை செட்டப் செய்து தன்னை போட்டுத் தள்ள முயற்சித்ததாக கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தர்மபுரி கோர்ட், இதுகுறித்து விசாரிக்குமாறு தர்மபுரி டவுன் போலீஸாருக்கு உத்தரவிட்டது. போலீஸார் அபீதா மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக கோர்ட்டி்ல ஆஜராவதற்காக சிங்கப்பூரிலிருந்து கிளம்பி சென்னை வந்தார் அபீதா. இதையடுத்து உஷாரான விமான நிலைய போலீஸார், அபீதாவை அங்கேயே வைத்தகு் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+