குற்றாலம்: குளிக்கப் போனவர்களின் கார்க் கதவை உடைத்து 8 லட்சம் நகைகள் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

குற்றாலம்: குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த தம்பதிகள், நகைகளை காரில் கழற்றி வைத்து விட்டு குளிக்கச் சென்றதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், பூட்டப்பட்டிருந்த காரின் கதவை உடைத்து ரூ 8 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது..

பரவலாக பெய்து வரும் மழையால், தற்போது குற்றாலத்தில் சீசன் களைக் கட்டியுள்ளது. எனவே, இந்தியா மட்டுமின்றி உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் இன்று மதுரை செட்டிகுளத்தை சேர்ந்த தினேஷ்பாண்டியன்,மற்றும் அவரது மனைவி ஒருகாரில் குற்றாலம் வந்தனர்.தாங்கள் அணிந்திருந்த நகைகளை கழட்டி காரில் வைத்துவிட்டு காரை பூட்டி மெயின் அருவியில் குளிக்க சென்றுவிட்டு அரை மணி நேரம் கழித்து வந்து காரை பார்த்துள்ளனர்.

அப்போது, காரின் கதவுகள் திறக்கப்பட்டு காரிலிருந்த நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது தெரிய வந்து அதிர்ந்து போனார்கள். காரில் அவர்கள் கழற்றி வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள், 2வைர மோதிரம் ஆகியவை காணவில்லை என அவர்கள் குற்றாலம் போலீசில் புகார் அளித்தனர்.

பகல் நேரத்தில் காரின் கதவை உடைத்து நகைகளைக் கொள்ளையிட்ட கள்வர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். இச் சம்பவம் குற்றாலம் வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+