லெபனான் மீது இஸ்ரேல் ராக்கெட் வீசி தாக்குதல்!
காஸா: லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதை அடுத்து பதற்றம் எழுந்துள்ளது.
இஸ்ரேல் மீது லெபனான் தீவிரவாதிகள் நேற்று ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினார்கள். அதில் கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. ஆனால், உயிர்சேதம் எதுவும் இல்லை.
அதற்கு பழிக்கு பழிவாங்க லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பெய்ரூட் - சிடான் நகருக்கும் இடையே நாமெக் என்ற இடத்தில் தீவிரவாதிகள் பகுதி உள்ளது. அதன் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

லெபனானிலிருந்து நான்கு ராக்கெட்கள் தங்களது பகுதிக்குள் வந்ததைத் தொடர்ந்து லெபனானில் உள்ள ஒரு இலக்கைக் குறி வைத்து இஸ்ரேலிய படைகள் தாக்கியுள்ளன. இந்த இடம் தீவிரவாத தலம் என்றும் இஸ்ரேல் வர்ணித்துள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே 2006ல் பெரும் மோதல் மூண்டது. அதன் பிறகு இப்போதுதான் முதல் முறையாக லெபனானுக்குள் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல்.
இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்திய இடம், பாலஸ்தீன விடுதலை அமைப்புக்குச் சொந்தமான இடமாகும். நாமீ என்ற இடத்தில் இது உள்ளது. தலைநகர் பெய்ரூட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.
ஆனால் இஸ்ரேல் மீது தாங்கள் ராக்கெட் வீச்சை நடத்தவில்லை என்று பாலஸ்தீன விடுதலை அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் அல் கொய்தாவுடன் தொடர்புடைய ஒரு அமைப்பு இந்த தாக்குதலுக்கு ஏற்கனவே பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.
லெபனான் இஸ்ரேல் இடையே சமீபத்தில் புதிய பதற்றம் ஏற்பட்டது. எல்லைப் பகுதியில் இந்த மாதத் தொடக்கத்தில் நடந்த மோதலில் இஸ்ரேல் வீரர்கள் நான்கு பேர் காயமடைந்தனர். இந்தப் பதட்டம் நிலவி வரும் நிலையில், ராக்கெட் வீச்சு நடந்ததால் இஸ்ரேல் கோபமடைந்துள்ளது.
இதுபோன்ற தாக்குதலை இஸ்ரேல் பொறுத்துக் கொள்ளாது என்றும் இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன விடுதலைப் படையின் ரகசிய சுரங்க அறை சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications