For Daily Alerts
Just In
ஜார்கண்ட்: தேசிய நெடுஞ்சாலையில் பெண் கான்ஸ்டபில் பலாத்காரம்
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் திருடர்கள் சிலர் பெண் போலீஸை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த புதனன்று இரவு அந்த பெண் போலீஸ், தனது பெற்றோருடன் தனியார் வாகனம் ஒன்றின் மூலம் தலைநகர் ராஞ்சியில் இருந்து லடேகருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். பரபரப்பான தேசிய நெடுஞ்சாலை 45யில் கார் வந்து கொண்டிருந்த போது காரை வழிமறித்த மர்மநபர்கள் சிலர் வாகனத்தில் இருந்த பொருட்களை திருடிக் கொண்டு பெண் போலீசை மறைவான பகுதிக்குச் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துவிட்டு சென்றுள்ளனர்.
பலாத்கார சம்பவம் தொடர்பாக லடேகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.
Comments
English summary
A woman constable was allegedly gangraped by a group of highway robbers at the National Highway- 45 late on Wednesday night.
Story first published: Saturday, August 24, 2013, 13:22 [IST]