கூடங்குளத்தில் அக்டோபரில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி- நாராயணசாமி

டெல்லியில் அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நாராயணசாமி கூறியதாவது:
உலகின் மிகப்பெரிய திட்டம்
மகாராஷ்டிர மாநிலம் ஜெய்தாபூரில் அமையும் புதிய அணு உலை தொடர்பாக பிரான்ஸ் நாட்டுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய அளவில் 9,900 மெகா வாட் மின்சாரத்தை உருவாக்கும் அணுமின் திட்டமாக அது திகழும். அதை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
கூடங்குளம் அணு உலை
கூடங்குளத்தில் அமைந்துள்ள முதலாவது அணு உலையில் 1,000 மெகா வாட் மின்சார உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் அணு உலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என சிலர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். அந்தத் திட்டத்துக்கு எதிராக சில அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி தவறான பிரசாரங்களை மேற்கொண்டன.
இந்நிலையில், அணு உலைத் திட்டம் தொடரலாம் என கடந்த மே 6-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, 1,000 மெகா வாட் மின்சார உற்பத்திக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
400 மெகா வாட் மின்சார உற்பத்தியில் தொடங்கி அக்டோபர் இறுதிக்குள் 1,000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனை முதலாவது அணு உலை பெறும்.
கல்பாக்கத்தில் 2014ல்
கல்பாக்கத்தில் புரோட்டோ ரக அதிவேக ஈனுலை (ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர்) அமைக்கும் பணிகள் 97 சதவீதம் நிறைவடைந்து விட்டன. 2014-இல் அங்கு ஈனுலை செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் நாராயணசாமி.
கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய அணுசக்தித் துறைச் செயலர் ஆர்.கே. சிங், "அணுமின் உற்பத்திக்கான விலை தொடர்பாக பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா பேச்சு நடத்தி வருகிறது.
மேலும், நம் நாட்டில் அணு விபத்து இழப்பீடு சட்டம் அமலில் உள்ளது. அதனால், திட்டத்தை செயல்படுத்தும்போது ஏற்படும் இழப்புகளுக்கு எத்தகைய நிவாரணம் வழங்குவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது' என்றார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications