ஆந்திராவை 3 ஆக பிரிப்பதுதான் வழி.. வலுக்கும் புது கோரிக்கை
ஹைதராபாத்: ஆந்திராவை 3 மாநிலங்களாகப் பிரிப்பதுதான் தற்போதைய பிரச்சனைக்குத் தீர்வாக இருக்கும் என்ற குரல் நாளுக்குநாள் வலுத்து வருகிறது.
ஆந்திராவை 3 மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று அண்மையில் மத்திய ரயில்வே இணை அமைச்சர், சூர்ய பிரகாஷ் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது மற்றொரு மத்திய அமைச்சரான கிஷோர் சந்திர தியோவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி நியமித்திருக்கும் ஏ.கே. அந்தோணி தலைமையிலான கமிட்டிக்கு அவர் அனுப்பியிருக்கும் கடிதத்தில், ஆந்திராவை, தெலுங்கானா, ராயலசீமா, ஆந்திரா என மூன்றாகப் பிரிக்க வேண்டும். ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகாப்பட்டினத்தை அறிவிக்க வேண்டும். இப்படி மூன்றாகப் பிரிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு லோக்சபாவில் மீண்டும் அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
தெலுங்கானா, கடலோர ஆந்திராவில் தலா 17 லோக்சபா தொகுதிகளும் ராயலசீமாவில் 8 தொகுதிகளும் வரும்.
அப்படி அமைத்தால், ஹிமாச்சல பிரதேசம், உத்தர்காண்ட், கோவா, புதுச்சேரி, திரிபுரா, சிக்கிம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றை விட ராயலசீமா அதிக தொகுதிகளைக் கொண்ட மாநிலமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications