சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சோனியா!
Subscribe to Oneindia Tamil

பாராளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்னை இருந்ததால் அதுதொடர்பான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. 'அவரது உடல் நிலை சீராக உள்ளது. எனவே கவலைப்படத் தேவையில்லை' என்று எய்மஸ் டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து 5 மணி நேர சிகிச்சைக்கு பின் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் சோனியா வீடு திரும்பினார்.
இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோனியா காந்தியை, பிரதமர் மன்மோகன் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.












Click it and Unblock the Notifications