சிதம்பரம் நீதிமன்ற சாவியைக் காணவில்லை!
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்: நீதிமன்றச் சாவியைக் காணவில்லை என சிதம்பரம் நீதிமன்ற உதவியாளர் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
சிதம்பரம் நீதிமன்றத்தில் உதவியாளராக பணி புரிந்து வருபவர் ஸ்ரீதரன். இவர் நேற்று சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘தான் சிதம்பரம் நீதிமன்ற உதவியாளராக பணியாற்றுவதாகவும், நேற்று காலை பஸ்நிலையத்திற்கு வந்த போது தன்னிடம் இருந்த 2வது கூடுதல் அமர்வு நீதிமன்ற சாவியும், வெளிக்கதவு சாவியையும் காணாமல் போனதாக தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதரனின் வழக்கைப் பதிவு செய்து கொண்ட போலீசார் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications