கிராம சபை கூட்டத்தில் பெண் மானபங்கம்... பஞ்சாயத்து தலைவியின் கணவர் கைது
கரூர்: கரூர் அருகே நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பெண்ணை மானபங்கம் செய்த பஞ்சாயத்து தலைவியின் கணவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மந்தகிரி பஞ்சாயத்து உள்ளது. இதன் தலைவராக சித்ராதேவி உள்ளார். கடந்த, 15 ம் தேதி அன்று வழக்கம் போல் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான மாரியம்மாள் (38) என்பவரும் கலந்து கொண்டு, பஞ்சாயத்தில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள் குறித்து பேசியதாக தெரிகின்றது.
இதனால் ஆத்திரம் அடைந்த மந்தகிரி பஞ்சாயத்து தலைவி சித்ரதேவியின் கணவர் ரவிசந்திரன், மரியம்மாளை தாகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், அவரை தாக்க முயன்றதோடு, அவரது சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட மாரியம்மாள் இது குறித்து சிந்தாமணிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரவிசந்திரனை கைது செய்து விசாரணை நட்த்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications