எந்த கோஷ்டியானாலும் அடக்கி வைக்கும் வல்லமை உண்டு: கருணாநிதி வார்னிங்
சென்னை: திமுகவில் உள்ள எந்தக் கோஷ்டியானாலும் அது அடக்கப்படும்.. அதை அடக்கி வைக்கும் வல்லமை தமக்கு உண்டு என்று அக் கட்சித் தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி அருகே நேற்று நடைபெற்ற வேலூர் மாவட்ட திமுக செயலர் ராணிப்பேட்டை காந்தி இல்லத் திருமண விழாவில் கருணாநிதி பேசுகையில், தமிழ்நாட்டில் கோஷ்டிப் பூசலே இல்லாத மாவட்டம் என்றால் அது வேலூர்தான் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் இங்கே கூறினார்.

இது துரைமுருகன் மாவட்டம் என்பதால் அப்படிக் கூறுகிறாரா என்று தெரியவில்லை. வேலூர் மாவட்டத்தில் இல்லை என்றால் மற்ற மாவட்டங்களில் இருப்பதைப் போல் சிலர் நினைக்கக் கூடும். எந்தக் கோஷ்டியும் எங்கும் இல்லை.
எந்தக் கோஷ்டி இருந்தாலும் அந்தக் கோஷ்டிகளை அடக்கும் வல்லமையும், வாய்மையும் என்னிடமும், திமுக தலைவர்களிடமும் உண்டு என்றார்.












Click it and Unblock the Notifications