நவி பிள்ளையின் குற்றச்சாட்டு பாரபட்சமானது.. சொல்கிறது இலங்கை
லண்டன்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை இலங்கை குறித்து தெரிவித்துள்ள கருத்துக்களும், அறிக்கையும் பாரபட்சமானது, ஒரு தலைபட்சமானது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆய்வு நடத்தும் முன்பே நவநீதம்பிள்ளை இலங்கை மீது குற்றம் சாட்டும் மனப்பாண்மையோடு வந்துள்ளார். ஐ.நா. குழுவினர் இலங்கை குறித்து அண்மையில் அளித்த அறிக்கையின் உண்மையை ஆராயாமல், அதற்கு எதிராக ஒரு அறிக்கையை அவர் சமர்பித்துள்ளார்.
போரில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தாமல், விடுதலைப்புலிகள் உள்ளிட்ட தமிழர்கள் உயிரிழந்த முள்ளிவாய்க்காலுக்கு சென்று அஞ்சலி செலுத்த முயன்றதில் இருந்து அவரின் சார்பு நிலை தெரிய வந்துள்ளது.

இலங்கை அரசு மீது போர்க்குற்றம் செய்ததாக சாட்டும் அவர், அதுகுறித்து ஆதாரங்களை சமர்பிக்காதது ஏன்.
நவி பிள்ளையின் அறிக்கை நியாயமற்றது, தவறானது, பாரபட்சமானது. நாங்கள் அவரை இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே இலங்கைக்கு வந்து நேரில் பார்வையிடுமாறு அழைத்திருந்தோம். இதிலிருந்தே நாங்கள் எதையும் மறைக்க விரும்பவில்லை என்பதை அறியலாம்.
ஆனால் அப்படி இருந்தும், எங்களது செயல்பாடுகள் தெளிவாக இருந்தும் கூட ஒருதலைபட்சமாக குற்றம் சாட்டியுள்ளார் பிள்ளை. அவரது அறிக்கையில் நேர்மை இல்லை, சமச்சீர் இல்லை என்றார் பெரீஸ்.












Click it and Unblock the Notifications